குரு பஞ்சகவ்யம் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு – கேள்வி பதில்கள்

 


🌿 குரு பஞ்சகவ்யம்

(தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வறிக்கை அடிப்படையில்)

கேள்வி – பதில்கள்


 1. இந்த ஆய்வறிக்கை யாரால் செய்யப்பட்டது?

பதில்:
இந்த ஆய்வு
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
பயிர் மேலாண்மை இயக்குநரகம்,
நம்மாழ்வர் கரிம வேளாண் ஆராய்ச்சி மையம்,
கோயம்புத்தூர் – 641003
ஆல் நடத்தப்பட்டு 18.12.2025 அன்று வழங்கப்பட்டது.


 2. ஆய்வு செய்யப்பட்ட மாதிரி என்ன?

பதில்:

  • மாதிரி வகை: திரவம் – மஹா குரு பஞ்சகவ்யம்

  • வழங்கியவர்: ஜகத் குரு, மோகப்பேர், சென்னை

  • சோதனை முறை: ஒரு பகுதி பஞ்சகவ்யம் + இரண்டரை பகுதி நீர் கலந்து அளவீடு

👉 இது நேரடி வயல் பயன்பாட்டு செறிவு அல்ல.


 

3. குரு பஞ்சகவ்யம் உரமா?

பதில்:
இல்லை.
குரு பஞ்சகவ்யம் நேரடி உரம் அல்ல.

👉 இது என்ன செய்கிறது என்றால்,
மண்ணில் ஏற்கனவே இருக்கும் சத்துக்களை
கோடிக்கணக்கான நுண்ணுயிர்களைச் சேர்த்து (Billions of microorganisms – Inoculation செய்து)
நுண்ணுயிர்கள் மூலம் பயிர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் வடிவமாக மாற்றுகிறது.

👉 இதனால் ரசாயன உரம் போடாமலேயே
விளைச்சல் பெற முடிகிறது.
(செலவில்லா விவசாயம்)


 4. pH மதிப்பு 3.14 என்றால் பயிர்களுக்கு ஆபத்தா?

பதில்:
 இல்லை. ஆபத்து இல்லை.

ஏன்?

  • இது நீர்த்தப்பட்ட மாதிரியின் மதிப்பு

  • இது நேரடியாக வயலில் ஊற்றும் அளவு அல்ல

  • பஞ்சகவ்யம் ஒரு உயிருள்ள உயிரியல் கலவை

👉 மண்ணில் சென்றதும்:

  • மண் தானாகவே pH-ஐ சமநிலைப்படுத்தும்

  • நுண்ணுயிர்கள் அமிலத்தன்மையை மெதுவாக மாற்றும்

👉 அதனால் பயிர்களுக்கு தீங்கு ஏற்படாது.


 5. மின்கடத்துத்திறன் (உப்புத்தன்மை) மதிப்பு 1.76 என்றால் உப்பு அதிகமா?

பதில்:
 இல்லை. இது பாதுகாப்பான அளவு.

👉 இது பஞ்சகவ்யத்தின் உப்புத்தன்மை மட்டுமே.
👉 மண்ணின் உப்புத்தன்மை அல்ல.

👉 நடைமுறையில் இது பல மடங்கு நீர்த்துப் பயன்படுத்தப்படுவதால்,
மண்ணில் உப்பு அழுத்தம் உருவாகாது.


 6. பஞ்சகவ்யத்தில் சோடியம் இருக்கிறதே? அது மண்ணுக்கு கேடு தராதா?

பதில்:
 கேடு தராது.

ஏன்?

  • இது தனியாக சேர்க்கப்பட்ட ரசாயன சோடியம் அல்ல

  • கரிமப் பொருட்கள் உடன் கலந்து இருக்கிறது

  • கால்சியம், மெக்னீசியம் போன்ற தாதுக்களுடன் சமநிலையில் உள்ளது

  • நுண்ணுயிர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது

👉 அதனால் மண்ணின் உயிரை பாதிக்காமல் செயல்படுகிறது.


 7. கரிமம் – நைட்ரஜன் விகிதம் 5:1 என்றால் சரியா?

பதில்:
ஆம். திரவ நொதிப்பு கலவைக்கு இது சிறந்த விகிதம்.

👉 இதனால்:

  • நுண்ணுயிர்கள் வேகமாக செயல்படும்

  • சத்துக்கள் உடனடியாக மண்ணில் விடுவிக்கப்படும்

👉 திடக் கம்போஸ்டுக்கு வேறு விகிதம் தேவை.
👉 ஆனால் பஞ்சகவ்யம் போன்ற திரவ கலவைக்கு 5:1 சரியானது.


 8. இதில் உண்மையிலேயே சத்துக்கள் உள்ளதா?

பதில்:
ஆம். ஆய்வறிக்கை உறுதி செய்கிறது.

இதில் உள்ள முக்கிய சத்துக்கள்:

  • நைட்ரஜன்

  • பாஸ்பரஸ்

  • பொட்டாசியம்

  • கால்சியம்

  • மெக்னீசியம்

  • இரும்பு

மேலும்:

  • துத்தநாகம்

  • தாமிரம்

  • மாங்கனீசு

  • போரான்

👉 இது ஒரு முழுமையான உயிரியல் ஊட்டச்சத்து கலவை.


 9. கன உலோகங்கள் உள்ளதா?

பதில்:
 இல்லை – பாதுகாப்பான அளவில் உள்ளது.

  • கேட்மியம்: இல்லை

  • ஈயம்: மிகக் குறைந்த அளவு

  • குரோமியம்: அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள்

👉 மனிதர், மண், பயிர் – மூன்றுக்கும் பாதுகாப்பானது.


 10. புதிய மாட்டுச் சாணத்தை நேரடியாக வயலில் போடலாமா?

பதில்:
 போடக்கூடாது.

ஏன்?
புதிய சாணத்தில்:

  • அதிக சூடு

  • தீவிர அமோனியா

  • பாதக கிருமிகள்

இதனால்:

  • பயிர் வேர்கள் கருகும்

  • நல்ல நுண்ணுயிர்கள் அழியும்

  • நாற்றம், ஈ, நோய் உருவாகும்

  • களைகள் உருவாகும்

👉 புதிய சாணத்தை மக்க வைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.


11. “புதிய சாணம் போட்டால் மண் பலம் பெறும்” என்பது உண்மையா?

பதில்:
❌ இல்லை. இது தவறான நம்பிக்கை.

👉 தற்காலிகமாக பச்சையாகத் தோன்றலாம்.
👉 ஆனால் நீண்ட காலத்தில்:

  • மண் கெட்டியாகும்

  • உப்புத்தன்மை அதிகரிக்கும்

  • நோய், பூச்சி அதிகரிக்கும்

👉 மண் பலம் என்றால் உயிர் + சமநிலை.
👉 புதிய சாணம் உயிரியல் குழப்பம்.



12. பல மாடுகள் அல்லது ஆடுகளை வயலில் மேய விடுவது நல்லதா?

பதில்:
குறுகிய காலத்தில் பயன் இருப்பது போலத் தோன்றலாம்.
ஆனால் நீண்ட காலத்தில் இது மண்ணை கடுமையாக சீரழிக்கும்.

இதனால் ஏற்படும் பிரச்சினைகள்:

  • ஒரே இடத்தில் அதிக அளவு மலம் சேரும்

  • மண் இறுகி கெட்டியாகும்

  • மண்ணில் காற்றோட்டம் குறையும்

  • உப்புத்தன்மை மற்றும் அமோனியா அளவு அதிகரிக்கும்

  • மண்ணிலுள்ள நுண்ணுயிர்களின் சமநிலை குலையும்

  • பயிர் வேர்கள் கருகும்

  • நல்ல நுண்ணுயிர்கள் அழியும்

  • நாற்றம், ஈ, நோய்கள் உருவாகும்

  • தேவையற்ற களைகள் அதிகரிக்கும்

👉 இது உரமிடல் அல்ல.
👉 இது மண்ணுக்கு ஏற்படும் உயிரியல் அழுத்தம்.

👉 இது மண்ணுக்கு அழுத்தம்.


13. குரு பஞ்சகவ்யம் இதற்கு மாற்றாக எப்படி உதவுகிறது?

பதில்:
குரு பஞ்சகவ்யம் என்பது
மாட்டிலிருந்து கிடைக்கும் மூலப்பொருட்கள்
(மாட்டு சாணம், மாட்டு மூத்திரம்,  மூலிகைகள்)
இவற்றை உயிரியல் முறையில் புளிக்க வைத்து,
மண்ணுக்கு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வடிவமாக மாற்றிய கலவையாகும்.

இது என்ன செய்கிறது?

  • மண்ணில் கோடிக்கணக்கான நல்ல நுண்ணுயிர்களைச் சேர்க்கிறது

  • ஏற்கனவே மண்ணில் உள்ள நுண்ணுயிர்களை வேகமாக செயல்படச் செய்கிறது

  • மண்ணில் உள்ள சத்துக்களை பயிர் எடுத்துக்கொள்ளும் நிலையில் திறக்கிறது

  • உப்பு, அமோனியா போன்ற தீங்கு தரும் விளைவுகள் இல்லாமல்
    சமநிலையான ஊட்டச்சத்து வழங்கலை உறுதி செய்கிறது

இதனால் கிடைக்கும் நன்மைகள்:

✔ மண் உயிர் பெறுகிறது
✔ மண்ணின் கட்டு தன்மை குறைகிறது
✔ பயிரில் உடனடியாக ஆரோக்கியம் தெரிகிறது

✔ நோய் எதிர்ப்பு சக்தி உயரும்
✔ ரசாயன உரம் தேவையில்லை
✔ விவசாய செலவு கணிசமாக குறைகிறது

👉 புதிய சாணத்தை நேரடியாகப்  மண்ணில் போடுவது, ரசாயன

உரம் போடுவது  மண்ணுக்கும் பயிருக்கும் தீங்கு விளைவிக்கிறது.
குரு பஞ்சகவ்யம் மண்ணை குணப்படுத்துகிறது.

✔ செலவு குறைகிறது


 15. குரு பஞ்சகவ்யத்தை எப்போது பயன்படுத்த வேண்டும்?

பதில்:

  • பயிர் சோர்வாக இருக்கும் போது

  • நோய் ஆரம்ப அறிகுறி தெரியும் போது

  • மண் உயிர் குறைந்த நிலங்களில்

👉 பயிர் நன்றாக இருந்தால் அதிகமாக தேவையில்லை.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.


 16. எல்லா மண்ணுக்கும் இது பொருந்துமா?

பதில்:
ஆம்.

✔ மணல் மண்
✔ களிமண்
✔ உப்பு மண்
✔ உயிரற்ற மண்

👉 காரணம்:
இது மண்ணை மாற்றவில்லை.
மண்ணை வேலை செய்ய வைக்கிறது.


✅ முடிவுரை

 குரு பஞ்சகவ்யம்:

  • தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்யப்பட்டது

  • இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

  • கன உலோகப் பிரச்சினை இல்லை

  • ரசாயன உரத்தை பயன்படுத்துவதை விட பாதுகாப்பானது

  • செலவில்லாதது

  • எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது

👉 இது உரம் அல்ல.
👉 இது மண்ணின் உயிரை எழுப்பும் உயிரியல் செயலூக்கி.

Comments

Popular posts from this blog

மனிதனுக்கும் மண்ணுக்கும் - நுண்ணுயிர்கள் (Micro-organisms) ஏன் இவ்வளவு முக்கியம்?

💧 சுத்தமான குளோரின் கலக்காத நீரை குரு பஞ்சகவ்யமாக மாற்றுவது எப்படி?

🌾 குரு பஞ்சகவியம் – விவசாயிகள் பகிரும் உண்மை அனுபவங்கள் பதிவு -1