குரு பஞ்சகவ்யம் குறித்து விவசாயிகளின் சந்தேகங்களுக்கு – கேள்வி பதில்கள்
🌿 குரு பஞ்சகவ்யம் (தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக ஆய்வறிக்கை அடிப்படையில்) கேள்வி – பதில்கள் 1. இந்த ஆய்வறிக்கை யாரால் செய்யப்பட்டது? பதில்: இந்த ஆய்வு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் , பயிர் மேலாண்மை இயக்குநரகம் , நம்மாழ்வர் கரிம வேளாண் ஆராய்ச்சி மையம் , கோயம்புத்தூர் – 641003 ஆல் நடத்தப்பட்டு 18.12.2025 அன்று வழங்கப்பட்டது. 2. ஆய்வு செய்யப்பட்ட மாதிரி என்ன? பதில்: மாதிரி வகை: திரவம் – மஹா குரு பஞ்சகவ்யம் வழங்கியவர்: ஜகத் குரு, மோகப்பேர், சென்னை சோதனை முறை: ஒரு பகுதி பஞ்சகவ்யம் + இரண்டரை பகுதி நீர் கலந்து அளவீடு 👉 இது நேரடி வயல் பயன்பாட்டு செறிவு அல்ல . 3. குரு பஞ்சகவ்யம் உரமா? பதில்: இல்லை. குரு பஞ்சகவ்யம் நேரடி உரம் அல்ல. 👉 இது என்ன செய்கிறது என்றால், மண்ணில் ஏற்கனவே இருக்கும் சத்துக்களை கோடிக்கணக்கான நுண்ணுயிர்களைச் சேர்த்து (Billions of microorganisms – Inoculation செய்து) நுண்ணுயிர்கள் மூலம் பயிர்கள் எளிதாக எடுத்துக்கொள்ளும் வடிவமாக மாற்றுகிறது. 👉 இதனால் ரசாயன உரம் போடாமலேயே விளைச்சல் பெற முடிகிறது. (செலவில்லா வ...